- “அன்னிமகள்” – நாடகம் : கதை சுருக்கம்:
உளுத்தம் பயிரை அழித்தது காலை- இதற்காக
ஒறுத்தனர் கோசர்; பறித்தனர் கண்ணை;
அண்ணனை இழந்த அண்ணியின் பெண் மகள்
சூளுரை மொழிந்தாள்;
வாளுறை நீக்கினான் வடிவாள் திதியன்;
மூண்ட போரில் முடிந்தனர் கோசர்;
இனத்தின் ஒற்றுமை இது எனக் காட்டும்
மனங்கவர் நாடகக் காப்பியம் இதுதான்.
– பாவலர்மணி. ஆ. பழம்நீ